-
30th June 2012, 09:29 AM
#531
Senior Member
Seasoned Hubber
-
30th June 2012 09:29 AM
# ADS
Circuit advertisement
-
30th June 2012, 09:35 AM
#532
Junior Member
Seasoned Hubber
பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
சிவாஜி சாதனை
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
"என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.
"நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
- by Isaignani IlayaRaaja(daily Thanti)
-
30th June 2012, 10:12 AM
#533
Senior Member
Diamond Hubber
என் தம்பியின் பாராட்டு அமர்க்களம்! அருமைத் தம்பி கோபாலுக்கு நன்றி! (தம்பி! நீ மாறவே மாட்டியா!) தம்பி! சூப்பர் கத்திச் சண்டை வருது...பாருங்கள்.
Last edited by vasudevan31355; 30th June 2012 at 10:33 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
30th June 2012, 10:14 AM
#534
Junior Member
Newbie Hubber
Raghavendar Sir,
Thanks a lot for intersting postings on this months release mela.
-
30th June 2012, 10:17 AM
#535
Junior Member
Newbie Hubber
Ragul Ram,
Pl.Follow little bit on what others do. I posted the behindwoods articles by our Murali Srinivas and absolutely no response??? I think we are ignoring the vital ones.
You re-invented the wheel again in your article.
-
30th June 2012, 10:21 AM
#536
Senior Member
Veteran Hubber
Dear Raghulram,
the article you have posted about the interview of actress Jaikumari, was already posted in our thread by one of our hub members.
-
30th June 2012, 10:43 AM
#537
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
Dear Raghulram,
the article you have posted about the interview of actress Jaikumari, was already posted in our thread by one of our hub members.
I agree with Karthik Sir. We do not discourage any members.We only request them to go thru atleast 2 previous threads fully. The repetition without giving credit to our own thread members ( I clearly mean Murali Srinivas Sir in this case )can be avoided this way. By the way,Mr.Murali's article has come out very well and I express my great appreciation on behalf of all our thread members.
http://www.behindwoods.com/features/...-28-06-12.html
Last edited by Gopal.s; 30th June 2012 at 11:42 AM.
-
30th June 2012, 10:57 AM
#538
Junior Member
Newbie Hubber
I strongly wish that Jaikumari or Alam should have been used in Engal Thanga Raja also.
Last edited by Gopal.s; 30th June 2012 at 12:10 PM.
-
30th June 2012, 11:20 AM
#539
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 3.
படம்:வெளிவந்த ஆண்டு: 1968
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.
நடிகர் திலகம் மோதும் வில்லன்: கே.பாலாஜி
இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.
'என் தம்பி' திரைக்காவியத்தில் இடம் பெற்ற அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கத்திச் சண்டை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் அனல் பறக்கும் கத்தி வீச்சு. அதுவும் படு ஸ்டைலாக. தம்பி வேண்டுமென்றே சண்டைக்கு அழைத்தவுடன் மறுத்து ஒதுங்குவதும், பின்னர் தம்பியின் கொலை வெறியை எண்ணி தற்காப்பின் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு பின்னர் புகுந்து விளையாடுவதும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.
கத்திச் சண்டை தொடங்கும் போது அந்த கோட்டை படு ஸ்டைலாக கழற்றும் லாவகம்...(இந்த இடத்தில் பின்னணி இசையில் கொடி நாட்டிப் பின்னிஎடுத்திருப்பார் எம்.எஸ்.வி).
கத்தியை எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற பாவனயில் நிற்கும் அந்த standing pose...
முதலில் தன் தம்பி மூர்க்கத்தனமாகத் தன்னைத் தாக்கத் தொடங்கி தன்னை கொலை செய்யுமளவிற்கு போய் விட்டவுடன் அதிர்ந்து, அடுத்த கணமே தம்பியாவது... மண்ணாவது...என்று தன் பாதுகாப்புக்காக அவனைத் தள்ளி விட்டு விட்டு புருவங்களை ஏற்றி படுஅலட்சியமாக அவனை எதிர்கொள்ளும் விதம்...
பின் சிரித்துக் கொண்டே தம்பியின் வாள் வீச்சை எதிர்கொண்டு, அவனைத் தவிடுபொடியாக்கி, தம்பியின் கத்தியும் தன் கைக்கு வந்தவுடன் அந்தக் கத்தியைத் தீட்டுவது போல தன் கத்தியில் ஒரு உரசு உரசி, கத்தியை அவனிடம் தூக்கிப் போடும் லாவகம்.
விஷம் தோய்ந்த கத்தியை அவன் தன்னைக் கொல்லப் பயன்படுத்தியுள்ளான் என தெரிந்து, அதிர்வுற்று, தம்பியிடம், "விஸ்வம், நீ மாறவே மாட்டியாடா?...என்று வேதனைப்பட்டு திரும்புவது.
என்று நடிகர் திலகத்தின் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் அற்புத சண்டைக்காட்சி.
ஒரு இடம் கூட 'டூப்'போடாமல் தலைவர் அசத்திய கத்திச்சண்டை.
கத்தியை எடுத்து நடிகர் திலகம் ஸ்டைலாக நிற்கையில் தியேட்டர்களில் விண்ணைப் பிளந்த ஆரவாரத்தையும்,கரகோஷத்தையும் தட்டிச் சென்ற, நடிகர் திலகம் ரசிகர்களால் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத (மற்ற ரசிகர்களையும் வியக்க வைத்த) சூப்பர் சண்டைக்காட்சியாயிற்றே! ஏன்! நடிகர் திலகமே ரசித்து மகிழ்ந்த பெருமையைப் பெற்ற சண்டைக் காட்சியாயிற்றே!
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 30th June 2012 at 11:39 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
30th June 2012, 11:44 AM
#540
Junior Member
Newbie Hubber
Vasu Sir,
The comment by our NT" After a long time i brushed up skills on sword fighting for this Film."
Bookmarks