நிற்க. ஏன் தொல்காப்பியனார் அந்தணர் என்னாது " பார்ப்பன" என்ற சொல்லைப் பெய்து பாடியுள்ளார் (அவர் பாடியது என்று வைத்துக்கொள்வோம் ) என்றும் கேட்கவேண்டும்
யாரைப் போய்க் கேட்பது? அந்தணர் என்று போட்டிருந்தால், " அறுவகைப் பட்ட அந்தணர் பக்கமும்" என்று முதலிலும் மூன்றாவதிலும் அகரமே வந்து மோனையழகு மோர்குழம்புபோல் சுவை மிக்கு நின்றிருக்கும். இதைத் தொல்காப்பியம் செய்யவில்லை யாதலால், பார்ப்பனர் என்பதும் அந்தணர் என்பதும் நுட்ப வேறுபாடு உடைய சொற்கள் என்று தெரிகிறது. ஆனால் பதிற்றுப் பத்தில் : "ஆறுபுரிந்தொழுகும் அறம்புரி அந்தணர்" என்று வந்துள்ளது. ஆகவே குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா எழுந்த காலத்தில் இரு சொற்களும் சற்று வேறுபட்ட பொருள் உடையனவாய் இருந்தனவாதல் தெளிவு. அந்தணர் என்போர் அறவோர் (தட்சிணை கேட்காதவர்கள் என்க.) ஒன்றுக்குத் தக்க இணை எதிர்பார்ப்பவர்கள் - தக்க இணை - தக்கிணை - தட்சிணை - அதைத் தொழிலாய் மேற்கொண்டோர். பிற்காலத்து இவ்வேறுபாடு ஒழிந்துவிட்டதெனலாம். பொருளிலக்கணத்தில் "அந்தணர் வாகை" என்று வழங்கப்படவில்லை தொல்காப்பியக் காலத்தில்.
heavy rains, internet too slow, any fault will edit later! Just enjoy whatever has come through to you,
Bookmarks