-
8th November 2012, 04:38 PM
#1971
Senior Member
Diamond Hubber
என் உயிர்க் 'காத்தவராயன்'
நன்றி முரளி சார்.
Taste விஷயத்தில் நமக்குள் ஒற்றுமை இருப்பது 100% நேற்று உறுதியாகி விட்டது. காத்தவராயனைப் பற்றித்தான் சொல்கிறேன். ஞான ஒளி, தெய்வ மகன், சவாலே சமாளி, ராமன் எத்தனை ராமனடி, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை போன்ற காவியங்கள் எந்த அளவிற்கு ஆழ என்னுள் ஊடுருவி இருக்கிறதோ அந்த வரிசையில் நான் சேர்த்துக் கொண்டுள்ள மற்றொரு காவியம் "காத்தவராயன்" சார். அதே போல இன்னொன்று "அம்பிகாபதி". காத்தவராயனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. அவ்வளவு மனம் கவர்ந்த படம் அது. உங்களுக்கும் அவ்வாறே என்று நினைக்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. தாங்கள் கூறியுள்ளது போல சட்டென்று சில படங்கள் பார்த்த மாத்திரத்தில் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்து போய்விடும். சில பார்க்க பார்க்க மனம் லயிக்க ஆரம்பிக்கும்.(முதல் மரியாதையை இதற்கு உதாரணமாக சொல்லலாமா!). எனக்கு 'காத்தவராயன்' முதல் வகை. படத்தின் முதல் நொடி முதல் கடைசி நொடி வரை இமை கொட்டாமல் பார்த்து பார்த்து பரவசப்பட்ட படைப்பு. அம்பிகாபதியிலும், காத்தவராயனிலும் அளவுக்கதிகமாக அழகாகத் தெரிவார். "இந்த தருக்கர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி மலைகளாகக் குவித்து விடுகிறேன்...பார்த்து விடுகிறேன் படைபலத்தை"...என்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு இறுதியில் அவர் முழங்கும் போது அவர் குரல் புரியும் சாகசம்.... அடேயப்பா! அந்த மலைப்பு இன்று வரை அடங்கவே இல்லை. அவர் போர்ஷன் மட்டுமல்லாது அனைத்து காட்சிகளுமே அற்புதம். படத்துவக்கத்தில் வரும் கோபிகிருஷ்ணா மற்றும் குமாரி கமலா என்ற இரு நாட்டிய ஜாம்பவான்களின் ருத்ரதாண்டவமாக மாறும் அருமையான சிவதாண்டவம், (கோபி கிருஷ்ணா என்ன மார்க்கண்டேயனா! காத்தவராயனிலும், ஜனக் ஜனக் பாயல் பஜேவிலும், பின்னாளில் வந்த தங்களுக்கு மிக மிகப் பிடித்த 'பாட்டும் பரதமும்' படத்திலும் (உலகம் நீயாடும் சோலை) ஒரே மாதிரியாகவே இருப்பார்) கொல்லிமலை சகோதரிகளின் ஆரம்பப் பாடல் (வெற்றியே அருள் அம்மா...)... காத்தன் குழந்தையாய் காட்டில் வளரும் காட்சிகள்...(முக்கியமாக கோழிக்குஞ்சுகள் நடனக் காட்சி (அய்யா கொல்லாதே...சாமி கொல்லாதே)...பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்) பாலையா, சந்திரபாபு இவர்களின் மந்திரப் பிழைப்புக் காட்சிகள், (வித்தை காட்டுகையில் சந்திரபாபுவின் மேல் விபூதி அடித்து பாலையா மயங்கி விழச் செய்ய, போட்டிக்கு நம்மவர் பதிலுக்கு மயங்கிக் கிடக்கும் சந்திரபாபு அருகே அமர்ந்து "அடச் சே"..என்று ஜெபித்து எழுப்பி விட, மறுபடி பாலையா தன் பங்கிற்கு "அடத்தூ" என்று மீண்டும் பாபுவை மயக்கமடைய வைக்க, திரும்ப நடிகர் திலகம் "அடச் சே" என்று எழுப்ப... மறுபடி பாலையா "அடத்தூ" என மயங்க வைக்க, இருவருக்கும் ஈடு கொடுத்து சந்திரபாபு 'டக்'கென மயக்கமடைவதும், உடனே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பதுமாய் ஒரே நகைச்சுவைக் கூத்துதான் போங்கள்!) நாட்டின் தளபதியாய் வந்து தங்கவேலு தரும் தாங்கமுடியாத வயிற்றுவலி நகைச்சுவைக் காட்சிகள்... (மரத்தை சுற்றி நம்மவர் கிழ வேடம் தரித்து மந்திர வட்டம் போட்டு விட்டு மரத்தடியில் அமர்ந்து "ஆரியமாலா... ஆரியமாலா" என்று துந்தனாவை சுண்டிக்கொண்டே ஜெபிக்க, இவரைப் பிடிக்க வரும் படைவீரரர்கள் ஒவ்வொருவராக வட்டத்தைத் தாண்ட முடியாமல் அந்த வட்டக் கோட்டிலேயே மந்திரத்துக்குக் கட்டுண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு சுற்ற ஆரம்பிக்க, இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி தங்கவேலு அனைத்தையும் ஒருகணம் மறந்து ஆடிக்கொண்டு செல்லும் ஒரு படை வீரனைப் பார்த்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று ரசிக்கும் ஒரு கட்டம் போதும்) சிறைப்பட்டிருக்கும் நம் சிங்கத்தைக் காப்பாற்ற பாலையா சந்திரபாபு மற்றும் எம்.என்.ராஜம் சகிதம் சிறைக்குள் நைசாக நுழைந்து நடத்தும் அதியற்புதமான பொம்மலாட்ட நடன நிகழ்ச்சி (எலாஸ்டிக் கயிறுகளுடன் சந்திரபாபுவும் ராஜமும் பின்னி எடுத்திருப்பார்கள்)..("ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜீயாலகடி ஜீயாலோ") துப்பறிய வரும் தளபதி தங்கவேலுவை தங்கள் வீட்டில் பாபு, பாலையா இருவரும் பெண் வேடங்கள் இட்டுக்கொண்டு இம்சை அளித்து அடிக்கும் கூத்துக்கள்...கண்ணாம்பாவின் கனல் கக்கும் வசன மழை... சாவித்திரியின் பாந்தமான அதேசமயம் அழுத்தமான,பிடிவாதத்தனமான நடிப்பு... ஈ.ஆர்.சகாதேவனின் சீறல்... செருகளத்தூர் சாமா அவர்களின் குருதேவப் பொருத்தம்... ஈ.வி.சரோஜாவின் அட்டகாசமான நடனங்கள்... ஓ .ஏ.கே. தேவரின் சில நிமிட கம்பீரம்... மல்யுத்த பயில்வான் அமீர் அலியின் வாளிப்பான வழவழ மொழுமொழு பளபள உடம்பு... காத்தன் ஊரை அழிக்கும் பிரம்மாண்டங்கள்... (வீடுகளின் தூண்களை மட்டும் பிடுங்கி துவம்சம் செய்வார்) கழுமரம் ஏற்றப்படுமுன் யானையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையடி பெற்று துடித்து துவளும் தலைவர்... அதன் பின்னணியில் சிதம்பரம் S.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் "விதியா... சதியா"பாடல்... பிரம்மாண்ட ஐயனார் சிலை?!.. சிலையின் கால்களை தன் கைகளால் நகர்த்தி மலை போன்ற சிலையை விழச் செய்து ஊரை அழிக்கும் பிரம்மிப்பு...வளையல்காரன், குடுகுடுப்பைக்காரன், வயோதிகக் கிழவன் என வேடங்கள் பல தரித்து நம் வேட்கை தணிக்கும் நடிகர் திலகம்... தஞ்சை இராமையாதாஸ் அவர்களின் கருத்தான பாடல்கள்...ஜி.ராமனாதனின் அருமையான இசை... T.K..ராஜாபாதர் அவர்களின் கண்களை விட்டகலாத ஒளிப்பதிவு... 'ஸ்டன்ட்' சோமுவின் தயவால் அருமையான மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள்... பணத்தைத் தண்ணீராய் செலவு செய்த பிரம்மாண்டம்... சற்றும் தொய்வில்லாத ராமண்ணாவின் டைரக்ஷன்...
என்ற சகல அம்சங்களும் சரியாகக் கலக்கப்பட்ட கற்கண்டு பால் போன்றவன் என் ஸாரி நம் 'காத்தவராயன்'. இத்தனை அம்சங்கள் கொடிகட்டிப் பறந்த'காத்தவராயன்' என்னைப் பொறுத்தவரை வெள்ளிவிழா கண்டிருக்க வேண்டும்.
Last edited by vasudevan31355; 8th November 2012 at 05:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
8th November 2012 04:38 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2012, 07:17 PM
#1972
Junior Member
Newbie Hubber
vasu sir,
whenever you write about kathavarayan,you put your heart in it. I saw that film in the year 1969 in a touring talkies(thirupuvanam santhi). I cant remember well but you have written to perfection to kindle my interest. I'll see the movie with you .( I was born together with that film)
-
9th November 2012, 08:17 AM
#1973
Senior Member
Diamond Hubber
நன்றி கோபால் சார். நிச்சயம் இருவரும் சேர்ந்து காத்தனைப் பார்த்து களிப்புறலாம்.
-
9th November 2012, 08:32 AM
#1974
Junior Member
Newbie Hubber
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
Last edited by Gopal.s; 9th November 2012 at 10:13 AM.
-
9th November 2012, 08:36 AM
#1975
Junior Member
Platinum Hubber
A RARE STILL FROM NET
-
9th November 2012, 08:39 AM
#1976
Senior Member
Diamond Hubber
Mr. esvee,
Can you please list down the members name in order from the above picture ?
Thanks.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th November 2012, 08:42 AM
#1977
Junior Member
Platinum Hubber
Dear gopal sir
very nice review about sivandha mann-1969- today 43rd anniversary
journalist manian - main co-ordinator for makkal thilagam mgr in ulagam sutrum valiban.
Manian ..... Still you are in fire . Hope so . Cool
-
9th November 2012, 08:46 AM
#1978
Junior Member
Platinum Hubber
Dear raghavendran sir
can u help me to find out the names of the artists.
Known persons
nt- savithri - msv-
doubt- devika - mv rajamma
pl clarify sir
-
9th November 2012, 08:52 AM
#1979
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
Dear raghavendran sir
can u help me to find out the names of the artists.
Known persons
nt- savithri - msv-
doubt- devika - mv rajamma
pl clarify sir
I can identify two more. Bhimsingh,T.K.Ramamoorthy. Thanks a lot esvee sir.
-
9th November 2012, 09:03 AM
#1980
Junior Member
Platinum Hubber
rare pic from net
Bookmarks