Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    ஆயிரம் புலவர்கள் இருந்தாலும் நாம் பேசுவது சில புலவர்களை பற்றி மட்டுமே. அவர்கள் எழுதிய பல காவியங்கள் இருந்தாலும், நாம் தேர்ந்தெடுத்து ஆய்வது சில காவியங்களை மட்டுமே. அதிலும் ஆய்வின் தரம், புதிய மீள்பார்வைகள், பலவித கோணங்கள், இவை அந்த காவியத்தையே சுவாரஸ்ய படுத்தி,மக்களுக்கு புது நோக்கு கொண்டு அந்த காவியங்களை மீண்டும் படிக்க தூண்டும் இல்லையா?காலத்தால் பிற்பட்ட, குறைந்த அளவே பழைய விஷயங்களுக்கு ஒதுக்க முடியும், புதிய தலைமுறையை ஈர்க்கவும் வேண்டும்.

    நாம் பேசுவது ஒரு உலத்திலேயே சிறந்த திறமையை பற்றி. மற்ற திரிகளை போல உயர்வு நவிர்ச்சி அர்ச்சனைகள், சராசரிக்கும் கீழானவற்றை மிகை படுத்தல், எல்லாவற்றையும் பற்றி மொக்கையான பார்வை மற்றும் பொத்தாம் பொதுவான விமரிசனங்கள் போன்றவை நடிகர்திலகம் போன்ற பல உன்னதங்களை நம்மிடையே விட்டு சென்றோர்க்கு அவசியமில்லாதது.

    விமரிசனம் என்பது வார்த்தை விளையாட்டு மற்றும் எழுதும் திறனோ மட்டும் அல்ல. நாம் பார்த்ததை ,உணர்ந்ததை சரியான பார்வையில் மற்றோர் மனதிற்கு எடுத்து சென்று அவர்கள் பார்த்தவற்றை புதிய கோணத்தில் பார்க்க உதவுதல்.நாம் எழுதுவது அந்த படத்தை பார்க்கும் அனைவரும் உணர வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் விஷயங்களுக்கு உடன் பட்டே நான் என்னுடைய பங்களிப்பை செய்து வந்தேன்.

    நீங்கள் எழுவதை பார்த்தால் நான் dominate செய்து மற்றவர் பங்களிப்பை தடுப்பது போலல்லவா உள்ளது?

    நீங்கள் கேட்டு விட்டதால் நீதி,பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் கீழ்கண்ட படங்களை அலசலாம்.

    வளர் பிறை,எல்லாம் உனக்காக,முதல் தேதி,நானே ராஜா,ரங்கோன் ராதா, தேனும் பாலும்,ராஜபார்ட் ரங்கதுரை,பாட்டும் பரதமும்,மருமகள்,விடுதலை.
    Last edited by Gopal.s; 18th September 2013 at 11:50 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •