-
4th October 2013, 05:00 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் சின்னக்கண்ணன் சார்,
நடையழகுப் பாடல் தங்கள் நடையழகில் அருமை. அதன் விளைவு?. இதோ நாமும் எழுதுவோமே என்ற எண்ணம்.
காதல் வயப்பட்டு விட்டான் கட்டிளம் மங்கையிடம். அவளோ கண்களாலேயே காதல் மொழிபேசும் கலையில் தேர்ந்தவள். அவள் எப்படியிருப்பாள் என்று தன நண்பனிடம் (ஆம், நண்பனிடம்தான், ஏனெனில் அதுவரை தெரியாது அவன் தன் தம்பியென்று) விளக்கும் முகமாக பாடும் பாடலில்தான் அவனுக்கே சொந்தமான அந்த அழகு நடை..
கடற்கரையில் கட்டுமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நண்பனிடம் தன் காதலியின் அழகை வர்ணிக்கும்போதுதான் அவன் முகத்தில் என்ன மலர்ச்சி, மாறாத புன்னகை. அந்த உற்சாகத் துள்ளலோடு அவன் நடக்கும் நடையில்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது, எப்படி மனதை தட்டிப்பறிக்குது. கடற்கரையில் நடக்கும் அந்த ஸ்டைல் நடை அவனுக்கே உரிய தனிச்சொத்து. பலர் காப்பியடிக்க முயன்று தோற்றனர் செத்து.
காதலி 'அஹஹஹா' என்று ஹம்மிங் மட்டும் பிடிக்க, அவளை மனதில் நினைத்துக்கொண்டே அந்த ஸ்டைல் நடையுடன் பாடும் அழகில்தான் எத்தனை கம்பீரம்.......
'எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது'
(நடையழகை எழுதுவது என்று ஆகிவிட்டது, அது 'அண்ணியின்' பாடலாக இருக்கட்டுமே)
-
4th October 2013 05:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks