-
22nd May 2015, 09:10 PM
#11
Junior Member
Seasoned Hubber
ரவி,
நிலவுக் கோளை கல்நாயக் சுற்ற, ஆதவனைத் தாங்கள் சுற்ற, நாங்கள் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பாடல்களைப் பெற்று மகிழ்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்த கோள் எதுவோ...
புதனோ, அங்காரகனோ, குருவோ...
ஆம்.. குருவை எடுத்துக் கொள்ளலாமே..
குருவின் பெருமையைத் தாங்கள் அழகாக எடுத்துரைப்பீர்களே...
Sir
குருவை விட ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒரு கருவை மயமாக்கி என் பதிவுகளைப் போடலாம் என்று நினைக்கிறேன் . திரு கல்நாயக் அவர்களிடம் சிறிது கெஞ்சி - அவர் சேகரிக்கும் பூக்களில் ஒரு அழகிய மாலையத்தொடுத்து அந்த கருவிற்கு அணிவிக்க இருக்கிறேன் - மீண்டும் ஒரு நீண்ட பதிவு - 100 யைத்தாண்டலாம் அல்லது தாண்டாமலும் போகலாம் . நிலாவின் சொந்தக்காரர்களின் அனுமதியும் தேவை - பூக்களை மிதிக்காமல் பார்த்து நடந்து செல்ல வேண்டும் - நெய்வேலியிலிருந்து கிளம்பும் சுனாமியையும் கடக்க வேண்டும் - இப்பொழுது காற்றினில் மிதந்து வரும் புல்லாங்குழலின் இனிமை , வேறு திசையில் என்னை திருப்பக்கூடும் - இதையும் மீறி பதிவுகள் போட்டால் திமிங்கலமாக வரும் திலகத்தின் சங்கமத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் . இத்தனையும் எதிர்க்கொண்டு என் பதிவுகளை தொடர முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்த வண்ணம் உள்ளது .
அன்புடன்
Last edited by g94127302; 22nd May 2015 at 09:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd May 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks