-
9th May 2016, 03:16 PM
#11
சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவுகளை பாராட்டிய பெரியவர்கள் கோபு சார், ராமஜெயம் சார், சிவா சாருக்கு நன்றி!
பதிவை விரும்பி லைக் அளித்த ஆதிராம், வாசு, கோபால், சின்னகண்ணன், பரணி, சித்தூர் வாசு, ராகவேந்தர் சாருக்கு நன்றி!
பதிவை பாராட்டிய இளையதலைமுறையை சேர்ந்த mappi என்ற கார்த்திக்கிற்கு நன்றி!
அலைபேசியில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவுகளை whatsapp group-லும் பகிர்ந்த கவி திலகம் ஆதவனுக்கு நன்றி!
whatsapp -ல் படித்து பாராட்டிய ஷர்மிளா மேடம் மற்றும் நண்பர் ஸ்ரீராம், ராமஜெயம் (சாந்தி) ஆகியோருக்கும் நன்றிகள் பல!
கோபால்,
நீங்கள் ஜூலையில் வரும்போது நிச்சயமாக நீங்கள் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்.
வாசு,
அருமையான ஸ்டில்- களை பதிவு செய்து அதுவும் நான் எழுதிய காட்சிகளுக்கு support-ஆக பதிவு செய்திருப்பது மிக நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக நான் குறிப்பிட்ட கோவில் காட்சிக்கு அடுத்ததாக வரும் ஜீப்பில் பயணம் செய்யும் காட்சி அதற்கு முன்னரே கோவிலில் வைத்து நடிகர் திலகம் அணிந்திருக்கும் வேட்டி சட்டையை சுட்டிக் காட்டி இந்த டிரஸ்சோடவா ஜீப் ஓட்டப் போறே என்று சகஸ்ரநாமம் கேட்க இல்லே டிரஸ் மாத்திட்டு வந்துறேன் என்று போகும் நடிகர் திலகம் யூனிபார்மிற்கு மாறி நடந்து வருவாரே! பட்டு வேட்டி சட்டையில் அவ்வளவு அம்சமாக இருப்பவர் யூனிபார்ம் அணிந்தவுடன் கம்பீரமாக மாறும் அதிசயத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.
ஜீப் ஓட்டும்போது சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்திலே சூரக்கோட்டை என்பார். அடுத்து மற்றொன்றும் சொல்வார் கீழே இருக்கும்போதுதான் இது உன் ஊரு என் ஊரு-ங்கறதெல்லாம். வானத்திற்கு மேலே போய்ட்டா எல்லாமே நம்ம ஊருதான். இது அன்றைய நாட்களில் அரசியல் ஆதாயத்திற்காக சுயாட்சி என்றெல்லாம் வெற்று கோஷங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டும்வண்ணம் எழுதப்பட்ட ஒன்று.
மேள தாளம் பாடலில் வரும் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டில் படத்தில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அந்த காட்சியில் அழகாய் வெளிப்படும். படத்தில் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான் கவியரசர் என்றபோதிலும் வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பார்.
ஆனந்த் ரோலிற்கு நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்ஸும் அட்டகாசம். லதாவை அழைத்துப் போக வரும்போது விசிலடித்துக் கொண்டே வரும் அந்த நடை! விஎஸ் ராகவனிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் உட்கார்ந்து பேசிவிட்டு அவர் முறைத்தவுடன் பம்மி தன்னுடைய சீட்டிற்கு திரும்புவது என்று ஜாலியாக செய்திருப்பார்.
இப்படி எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காட்சியையும் எழுதிக் கொண்டே போக வேண்டியதுதான். அந்தளவிற்கு படத்தில் மெரிட் இருக்கிறது.
மீண்டும் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
9th May 2016 03:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks