-
25th October 2012, 08:06 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள (திருவல்லிக்கேணி) வாசுதேவன் சார், தங்கள் வரவு நல்வரவாகுக.
வந்ததுமே நான் பணிபுரியும் இடம் பற்றிய விவரத்தை தங்கள் பதிவில் இடம்பெறச்செய்து விட்டீர்கள். நன்றி. நீங்கள் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியில் படித்திருப்பதால், அங்கு தமிழாசிரியராகப்பணியாற்றிய புலவர் அகமது பஷீர் அவர்களைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். என் தந்தையின் மிகச்சிறந்த நண்பர். நான் படித்த மண்ணடி முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராக வந்திருந்தார். அவரது பேச்சும் இலக்கிய அறிவும் என்னை வியப்பிலாழ்த்தியது. பணி ஓய்வு பெற்றபின் ஆழ்வார் திருநகரியில் செட்டில் ஆகிவிட்டார்.
(இதையெல்லாம் தனி மடலில் பேசவேண்டியதுதானே என்று நினைக்கும் நண்பர்களுக்கு விளக்கம். என் தனிமடல் பகுதி திறக்கப்பட முடிவதில்லை அதனால்தான் இங்கு. சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்).
-
25th October 2012 08:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks