-
17th March 2013, 10:45 PM
#11
அன்பு வாசு சார்,
ஆழ்ந்த சிந்தனையோட்டத்தில் விளைந்த வேதனையோடு கூடிய உங்கள் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போவர். உங்கள் மனவருத்தத்தில் பங்கேற்பதுடன் இது போன்ற சூழல் மீண்டும் நடவாமல் இருக்க வேண்டுவோம்.
ஆதிராம்.
உங்கள் கேள்விக்கு பதில். வசந்த மாளிகை இந்த இரண்டாவது வாரத்திலும் நன்றாகவே போகிறது. மெருக்கேற்றலின் தரம் பற்றிய மனக்குறை பலருக்கும் இருந்த போதும் கணிசமான மக்கள் திரையரங்கிற்கு வருகை தருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலைக் காட்சிக்கு ஆல்பட் அரங்கத்திற்கு நான் சென்ற போது நல்ல கூட்டம். எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த இருவர், சிவாஜி படம் வசந்த மாளிகை அதற்குதான் டிக்கெட் வேண்டும். வேறு படத்திற்கு கொடுத்து விடாதீர்கள் என்று சொல்வதை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் பெரும்பாலோர் குடும்ப சமேதமாக வந்திருந்த காட்சி. அதிலும் இளம் பெண்களும் ஆண்களும் அடங்கும். அனைவரும் படத்தை ரசித்து பார்ப்பதை கவனிக்க முடிந்தது. பொது மக்கள்தான் 99 சதவிகிதம். நமது ரசிகர்கள் குறைவே. வந்திருந்த ரசிகர்களும் எந்தெந்த இடங்களில் ரசிக்க வேண்டும் என்பதை பொது மக்களுக்கு தங்கள் கைதட்டல்கள் மூலமாக சுட்டிக் காட்டி கொண்டிருந்தனர்.
நேற்று மாலை அப்படியென்றால் இன்று மாலை மீண்டும் ஹவுஸ் புல். அதுவும் மாலை 5.40-ற்கே. ரசிகர்கள் இந்த வாரமும் திரையரங்க வளாகத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டதாக கேள்வி. இன்றும் பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அந்த ரோடில் சென்றவர்கள் அரங்க வாசலை கடக்க பல நிமிடங்கள் ஆனதாம். இன்றும் 5000 வாலாக்கள் சரம் சரமாய் சீறி செவிகளை கிழித்தன என்று சொன்னார்கள். இன்றும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனராம். ஒரு விஷயம் தெரியுமா? அதே வளாகத்தில் வெளியாகி இருக்கும் புதிய படத்திற்கு டிக்கெட்கள் விற்காமல் இருக்க நமது படத்திற்கு black டிக்கெட் விற்பனை நடந்திருக்கிறது.
இங்கே இப்படியென்றால் மதுரையில் சரஸ்வதி திரையரங்கில் இரண்டாவது வாரமாக ரெகுலர் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாளிகை இன்று மாலைக் காட்சி ஹவுஸ் புல். ஆயிரம் இருக்கைகள் capacity உடைய சரஸ்வதி திரையரங்கம் இன்று மாலை நிறைந்து வழிந்திருக்கிறது [காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்]. ரசிகர்களின் உற்சாக ஆட்டபாட்டமெல்லாம் அமர்களமாக நடந்ததாக செய்தி. அன்னதான நிகழ்ச்சியும் நடைப்பெற்றதாக தகவல்.
சென்ற வாரம் வெளியாகாமல், இந்த வெள்ளிகிழமை வெளியான நெல்லை மாநகரிலும் சிறப்பான வரவேற்பை மாளிகை பெற்றிருப்பதாக செய்தி. பகிர்ந்து கொண்ட ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
-
17th March 2013 10:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks