-
13th May 2013, 10:02 AM
#11
Senior Member
Seasoned Hubber
சகல கலா வல்லவர் நடிகர் திலகத்தின் மிக அபூர்வமான நிழற்படத்தை இங்கு பகிரந்து கொண்ட வாசு சார் தங்களுக்கு மிக்க நன்றி.
இந்த வாத்தியம் பல ஆண்டுகளாக கோட்டு வாத்தியம் என்று அழைக்கப் பட்டு வந்தது. கோட்டு வாத்திய விற்பன்னரான, வானொலி நிலையத்தில் பணியாற்றிய, திரு நரசிம்மன் அவர்கள் தான் இதன் பெயரை சித்ர வீணா என மாற்றினார். அது மட்டுமல்லாமல் தன் புதல்வர்களையும் இந்தக் கலையில் விற்பன்னராக்கினார். இவருடைய மூத்த புத்ல்வர் தான் பிரபல சித்ர வீணா கலைஞர் திரு ரவிகிரண் அவர்கள். இவருடைய மற்றொரு புதல்வர் பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சித்ர வீணா கலைஞருமான திரு சசிகிரண் அவர்கள்.
நடிகர் திலகம் கர்நாடக சங்கீதத்தில் முறைப் படி பயிலாவிட்டாலும் கேள்வி ஞானத்தின் மூலம் அதனுடைய நுணுக்ககங்களை நன்கு அறிந்தவர். அது மட்டுமின்றி கீர்த்தனைகளை சுருதி பிசகாமல் பாடத் தெரிந்தவர். ஆனால் தன்னுடைய ஞானத்தை விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார். நரசிம்மன் அவர்கள் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த அன்பும் அவருடைய திறமையின் மேல் அதீத பற்றும் கொண்டவர். சங்கீத நுணுக்கங்களை அந்த வாத்தியத்தில் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி அவரிடம் நடிகர் திலகம் விளக்கம் கேட்கும் போது எடுத்த நிழற்படம் இது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th May 2013 10:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks