-
9th June 2013, 06:17 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் பாடல்களெல்லாம் சோக மயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை தொலைக்காட்சி சேனல்கள் உண்டாக்கி விட்டது போன்ற ஒரு பிரமை ஏனோ வந்து தொலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் பாடல்களெல்லாம் ஏதோ ஒருவர் படத்தில் மட்டுமே இருப்பது போன்ற மாயையும் உடைத்து எறிய வேண்டியதொன்று. வாழ்க்கையின் அர்த்தங்கள், எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை இன்றைய சூழலுக்கேற்பவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளவை நடிகர் திலகத்தின் படப் பாடல்களே.
தினமும் காலையில் எழுந்தவுடன் நடிகர் திலகத்தின் படத்தைக் கும்பிட்டு விட்டு படப்பிடிப்பிற்குச் சென்றால் அவருடைய ஆசியால் நடிப்பு கொஞ்சமாவது வரும்.
ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.
ராகவேந்தர் சார் ,
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )
தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.
போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
-
9th June 2013 06:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks