-
8th June 2013, 06:45 PM
#321
Junior Member
Devoted Hubber
அலுவல் நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததால் மற்றும் சில உள்நாட்டு பிரச்சனைகளால் சிறிது காலம் மையத்தில் குடிகொள்ள முடியவில்லை...பிரச்சனைகளும் அலுவல் பளுக்களும் குறைந்த நிலையில் இனி தொடர்ந்து பங்களிப்பு செய்ய இயலும் என்று நினைகிறேன்..!
அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
-
8th June 2013 06:45 PM
# ADS
Circuit advertisement
-
8th June 2013, 06:53 PM
#322
Junior Member
Newbie Hubber
வாருங்கள் சௌரி சார். புரட்சி புயல்தான் இனி.
-
8th June 2013, 06:55 PM
#323
Junior Member
Devoted Hubber
விரைவில் திரையரங்குகளில் திருவிழா காண தயாராகுங்கள் !
"திரையுலக சித்தர்" "நடிகர் திலகத்தின் "நீதி"
Last edited by NTthreesixty Degree; 8th June 2013 at 07:05 PM.
-
8th June 2013, 07:01 PM
#324
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Gopal,S.
வாருங்கள் சௌரி சார். புரட்சி புயல்தான் இனி.
"புரட்சி" என்ற வார்த்தை கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் அவர்களை ஆதிகாலத்திலிருந்து குறிப்பதாகும்.
அதை பொருத்திகொள்ளும் தகுதி எனக்கு இல்லை சார் ! இன்று தோனான் துருத்தி எல்லாம் "புரட்சி" என்று அடைமொழி, பெயருடன் சேர்த்துகொள்கின்றனர்...அவர்களில் ஒருவராக நான் இருக்க விரும்பவில்லை...!
என்றும் நடிகர் திலகத்தின் பலகோடி பிள்ளைகளில் ஒருவனாக இருப்பதே எனது அவா !
-
8th June 2013, 09:14 PM
#325
Senior Member
Diamond Hubber
இனிய பாடலான இனியது இனியது உலகம்... என்ன சொல்வது! அனைவரையும் தலைவர் முழு ஆக்கிரமிப்பு செய்த முழுமுதற் பாடல். காரிலிருந்து இறக்கி விடப்பட்டவுடன் படு ஜாலியாக மவுத் ஆர்கனை வாயில் வைத்தபடி சடேலென வலது காலை சைடில் வைத்து எடுக்கும் அந்த ஆர்ப்பரிப்பான ஸ்டெப். அப்படியே இடது காலும்.
ஏ.எல்.ராகவனின் "ஹஹஹ ஹூ" அப்படியே அள்ளும். தொடர்ந்து வரும் டரடா ... டரடா...தொடர்ச்சி 'டாடோ" என்று முடியும் போது வாய் குவித்த அந்த வாயசைப்பையோ கேட்கவே வேண்டாம்.
"பருவம் போகும் வழியோடு" துவங்கும் போது தலைவர் சரியான 12 மணி வெயிலில் நடித்திருப்பார். தலைவரின் நிழல் மிகச் சிறியதாக விழும். அன்று மாலை வரை அந்தப் பாடலை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பிள்ளைகளுடன் பாடிக்கொண்டு வருகையில், பின் இரண்டாவது சரணம் முடிந்து திரும்ப பாடல் முடிவில் பல்லவி ஆரம்பிக்கும் போது தலைவரின் நிழல் நீளமாக விழுவதைப் பார்க்கலாம். அனேகமாக மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம். அன்று முழுக்க அந்தப் பாட்டை எடுத்திருப்பார்களோ! அதனால்தான் அவ்வளவு ஆழமாக நம் நெஞ்சில் பதிந்ததோ! உற்சாகமான தன்னம்பிக்கை தரும் பாடல் தலைவரின் அசத்தல் ஸ்டைல் முத்திரைகளோடு.
-
8th June 2013, 09:40 PM
#326
Junior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
இனிய பாடலான இனியது இனியது உலகம்... என்ன சொல்வது! அனைவரையும் தலைவர் முழு ஆக்கிரமிப்பு செய்த முழுமுதற் பாடல். காரிலிருந்து இறக்கி விடப்பட்டவுடன் படு ஜாலியாக மவுத் ஆர்கனை வாயில் வைத்தபடி சடேலென வலது காலை சைடில் வைத்து எடுக்கும் அந்த ஆர்ப்பரிப்பான ஸ்டெப். அப்படியே இடது காலும்.
ஏ.எல்.ராகவனின் "ஹஹஹ ஹூ" அப்படியே அள்ளும். தொடர்ந்து வரும் டரடா ... டரடா...தொடர்ச்சி 'டாடோ" என்று முடியும் போது வாய் குவித்த அந்த வாயசைப்பையோ கேட்கவே வேண்டாம்.
"பருவம் போகும் வழியோடு" துவங்கும் போது தலைவர் சரியான 12 மணி வெயிலில் நடித்திருப்பார். தலைவரின் நிழல் மிகச் சிறியதாக விழும். அன்று மாலை வரை அந்தப் பாடலை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பிள்ளைகளுடன் பாடிக்கொண்டு வருகையில், பின் இரண்டாவது சரணம் முடிந்து திரும்ப பாடல் முடிவில் பல்லவி ஆரம்பிக்கும் போது தலைவரின் நிழல் நீளமாக விழுவதைப் பார்க்கலாம். அனேகமாக மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம். அன்று முழுக்க அந்தப் பாட்டை எடுத்திருப்பார்களோ! அதனால்தான் அவ்வளவு ஆழமாக நம் நெஞ்சில் பதிந்ததோ! உற்சாகமான தன்னம்பிக்கை தரும் பாடல் தலைவரின் அசத்தல் ஸ்டைல் முத்திரைகளோடு.
Sir,
Pls call me ..urgent
-
8th June 2013, 09:43 PM
#327
Junior Member
Devoted Hubber
Murasu tv - en magan
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்......
முரசு தொலைகாட்சியில் இப்பொழுது நடைபெறுகிறது நடிகர் திலகத்தின் என் மகன் !!
Last edited by NTthreesixty Degree; 8th June 2013 at 09:47 PM.
-
9th June 2013, 06:17 AM
#328
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் பாடல்களெல்லாம் சோக மயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை தொலைக்காட்சி சேனல்கள் உண்டாக்கி விட்டது போன்ற ஒரு பிரமை ஏனோ வந்து தொலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் பாடல்களெல்லாம் ஏதோ ஒருவர் படத்தில் மட்டுமே இருப்பது போன்ற மாயையும் உடைத்து எறிய வேண்டியதொன்று. வாழ்க்கையின் அர்த்தங்கள், எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை இன்றைய சூழலுக்கேற்பவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளவை நடிகர் திலகத்தின் படப் பாடல்களே.
தினமும் காலையில் எழுந்தவுடன் நடிகர் திலகத்தின் படத்தைக் கும்பிட்டு விட்டு படப்பிடிப்பிற்குச் சென்றால் அவருடைய ஆசியால் நடிப்பு கொஞ்சமாவது வரும்.
ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.
ராகவேந்தர் சார் ,
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )
தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.
போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
-
9th June 2013, 07:07 AM
#329
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
இதே வார்த்தையை ஒருமுறை தலைவரிடம் நேரில் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. ஒரே ஒரு செல்ல முறைப்பு. அவ்வளவே!
-
9th June 2013, 07:15 AM
#330
Junior Member
Newbie Hubber
Originally Posted by
vasudevan31355
இதே வார்த்தையை ஒருமுறை தலைவரிடம் நேரில் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. ஒரே ஒரு செல்ல முறைப்பு. அவ்வளவே!
என்ன செய்வது? கடவுள் சில பிறவிகளை மிக மிக நல்லவர்களாக படைத்து அனுப்பி விட்டான்.சிலருக்கு தன்னை புகழ்வதை நொடி தோறும் கேட்க ஆசை. மற்றோரை திட்டுவதை கேட்க அதை விட ஆசை. நம் தலைவருக்கோ அவரை நேரில் புகழ்வதும் பிடிக்காது.மற்றவரை திட்டவும் விட மாட்டார்.
Bookmarks