-
6th October 2013, 09:44 PM
#2941
Senior Member
Diamond Hubber
-
6th October 2013 09:44 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2013, 12:12 AM
#2942
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 7th October 2013 at 12:14 AM.
-
7th October 2013, 12:19 AM
#2943
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இனி படத்திற்கு வருவோம். முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் சற்று கசப்புணர்வுடன் ஆரம்பித்தாலும் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்
-
7th October 2013, 04:27 AM
#2944
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
முரளி சார்
சிலவற்றை நினைக்கும்பொழுதுமனம் கனக்கிறது
உலகைவிட்டு மறைந்துபோன ஒரு கலைஞனை கண்டு
ஒரு கூட்டம் இன்னமும் பயப்படுகிறது
வெடகம் வெட்கம்
-
7th October 2013, 04:41 AM
#2945
Senior Member
Devoted Hubber
Murali Srinivas
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
.
அன்புடன்
உண்மைதன் முரளி சார்
சிவாஜி என்ற மாமேதை
தன் நடிப்பில் அவருக்கு இருந்த தன்நம்பிக்கை
எதற்கும் யாரையும் கண்டு பயப்பட்டதில்லை
-
7th October 2013, 07:04 AM
#2946
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
தாங்கள் 'சவாலே சமாளி' சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி பார்த்த ஒரு சில தினங்களுக்குள் நான் கை பேசியில் தங்களிடம் உரையாடும் போது தாங்கள் நடிகர் திலகத்தின் ஆளுமை கொடிகட்டிப் பறக்கும் அந்த கிணற்று சீனைப் பற்றி இன்று பதிவில் குறிப்பிட்டது போல் அவ்வளவு அழகாகச் சொல்லி சிலாகித்து மகிழ்ந்தீர்கள். இன்று தங்கள் கருத்தை பதிவின் மூலமாகக் கண்டதும் அந்த சுகத்தை வேறு கோணத்தில் அனுபவித்தேன். நான் அந்த காட்சியைப் பற்றி இதுநாள் வரையில் என்னென்ன மனதில் நினைத்திருந்தேனோ அதை அப்படியே தங்கள் பதிவில் வார்த்தெடுத்து விட்டீர்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பற்றி எழுத வேண்டும் என்று மிக மிக ஆசை.
நாம் செல்லில் பேசிய அன்று என்னைத் தூங்க விடாமல் செய்தீர்கள்.
இன்று அதிகாலை எழுந்து தங்கள் அருமையான பதிவைப் படித்துவிட்டு மீண்டும் படுத்த போதும் உறக்கம் வரவில்லை. அந்தக் காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மிக்க நன்றி.
-
7th October 2013, 07:21 AM
#2947
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
சவாலே சமாளி திரையீடு பற்றிய தங்கள் பதிவு நம் அனைவரின் உள்ளத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே. 40 ஆண்டுகளுக்கு முன் நினைவுகள் செல்கின்றன. சென்னை சாந்தி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியிலேயே ஜெயலலிதா அவர்களிடம் நடிகர் திலகம் கிணற்றடியில் பேசும் காட்சி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதே போல் இறுதியில் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும் ஏகப்பட்ட கரகோஷம். தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நடிகையருள் ஒருவரான ஜெயலலிதா அவர்களின் சிறந்த நடிப்பிற்கு ஸ்கோப் அளித்த படங்களில் சவாலே சமாளியும் ஒன்று. நடிகர் திலகத்தைப் போலவே அவருடைய ரசிகர்களும் சிறந்த நடிப்பை யார் வழங்கினாலும் பாராட்டத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு முதல் நாள் அக்காட்சிகள் பெற்ற வரவேற்பே சாட்சி.
அன்றைய நாளில் சென்னை சாந்தி திரையரங்கில் ரசிகர்களின் திரையலங்காரங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டன. அரங்கு நுழைவாயில் அருகில் சற்றுத் தள்ளி சுவற்றில் ஆரம்பித்து வாசல் வரைக்கும் நீளமான பேனர் அமைத்து அதில் 150 படங்களும் பட்டியல் இடப் பட்டிருந்தன. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சின்ன சதுர வடிவிலான பேனர் என சின்னச் சின்னதாய் 150 பேனர்கள். அரங்கு முழுவதும் தோரணங்கள், கொடிகள், ஸ்டார்கள் எனத் திருவிழாக் கோலம். இன்றும் அந்தத் திருவிழாக் கோலம் தொடர்கிறது என்பதே அவருடைய தாக்கத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு வித்தியாசம் அன்றை அளவிற்கு இன்று ஸ்டார்களும் தோரணங்களும் இடம் பெறுவதில்லை. நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்கும் கலைஞர்கள் பாராட்டைப் பெறாமல் இருந்ததில்லை என்பது நிதர்சனமானது.
சவாலே சமாளி நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம். இப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு என்னை அந்தக் காலத்திற்கு இட்டுச் சென்றதன் விளைவே இப்பதிவு.
Last edited by RAGHAVENDRA; 7th October 2013 at 07:25 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th October 2013, 07:41 AM
#2948
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி முரளி சார், சவாலே சமாளியை நினைவு படுத்தியதற்கு. தங்களுக்கு எனது சிறிய அன்புப் பரிசு.
-
7th October 2013, 08:56 AM
#2949
Junior Member
Newbie Hubber
சின்ன கண்ணன் சார்,
நவராத்திரியும் அதுவுமாய், கஜுரஹோ ஞாபக படுத்தி தொலைத்த இக்கயவனின் இழி செயலை, அழகான நவராத்திரி பதிவினால் நேர்செய்து அம்மன் அருளை திரிக்கு மீட்டு கொண்டு வந்து விட்டீர்கள்.
கார்த்திக் சார்,
நான் பிறந்த நாட்டுக்கொரு பதிவாக ,அழகாக துள்ளி ,பெண்களை அழகாக மஞ்சளரைத்து ரசித்து விட்டீர்கள். இந்த பாடலும்,சக்தி தென்னாடு பாடலும் jamesbond படத்தின் மூட்,டோன் இரண்டையும் கெடுக்கும். வேறு எந்த படத்தில் வந்திருந்தாலும் மிக மிக ரசிக்க வைத்திருக்கும்.
உங்கள் ஐடம் ராஜஸ்ரீயை, காதல் காட்சி தொடரின் சின்ன மலராக விரிக்க (விறிக்க) போகிறேன்.
வேண்டுமென்றே ஆலத்தை கொண்டு வராமல் இதய துடிப்பை அதிக (படுத்துகிறீர்கள்).
வாசு,
உன்னுடைய பிறந்த நாள் பங்களிப்புகள்,முத்தமிழ் விழாக்களுக்கு நன்றி.
ராகவேந்தர் சார்,
எந்த பதிவு வந்தாலும் அதையொட்டிய தங்கள் பதிவுகள் சுவாரஸ்யம்.
முரளி,
சனி,ஞாயிறில் எங்களுக்கு விருந்து படைத்து ,எங்கள் விடுமுறை நாட்களை இனிதாக்கி விட்டீர்கள். இது வரை தனி காட்டு ராஜாக்களாக இருந்த நாங்கள்,தங்களின் இந்த சவாலை எப்படி சமாளிக்க போகிறோம்? எல்லா பதிவுகளுமே மிக மிக ரசிப்புக்குறியவை. தாங்கள் தர வேண்டிய செய்தியை package செய்யும் அழகு,பத்திரிகையாளர்களுக்கே பாடம் சொல்லும்.
Last edited by Gopal.s; 7th October 2013 at 09:03 AM.
-
7th October 2013, 09:24 AM
#2950
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி.
Savale Samaali - Nadigar thilagam Sivaji's acting is very manly and superb.
Last edited by ganse; 7th October 2013 at 09:26 AM.
Bookmarks