Quote Originally Posted by rajaramsgi View Post

ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.


முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.
இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் ,ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது ,திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது.இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.

இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.