-
26th August 2014, 01:13 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajaramsgi
உண்மை. இதே போன்ற எண்ணம் எனக்கு மற்றொரு பாடலிலும் வந்துள்ளது. பாடிய வாசுதேவன் ஜானகியை விட, இந்த பாடலில் பிசிரில்லாமல் அழகாய் கோரஸ் கொடுத்த பெண்மணிகளின் பங்கு அதிகம். எப்போது இதை கேட்டாலும் கோரஸ் மற்றும் வாத்தியகாரர்களை ஒரு சில மணி நேரங்களில் தயார் செய்து எப்படி பாட வைத்தார்கள் என்று மலைப்பாக இருக்கும்.
கரும்பு வில் படத்தில் மலர்களிலே.
சிறந்த பாடலாக்கம்.
ரதிமடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனைகள் முடியாதது
யாருங்க இதை எழுதியது? கண்ணதாசனின் நடையை ஒத்ததாக இருக்கு. கிடைத்த கொஞ்ச நேரத்திலும் மலேசியாவின் குரல் மனம் முழுதும் ஊடுருவி பாய்கிறது.
எழுத்து வரிசையில் இந்தப் பாடலும், "மலர்களே நாதஸ்வரம்" பாடலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் எனது செல்பேசிப் பாடல் தொகுப்பில். இரண்டிலுமே ஜானகி, மலேசியா மற்றும் கோரஸ் பாடகர்கள். இரண்டுமே ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் சேமித்துக் கேட்கக் கூடிய பாடலாக்கங்கள்.
"மலர்களே நாதஸ்வரம்" - சரணங்களில் மலேசியாவின் குரலுக்கு இணையாக ஜானகியின் ஹம்மிங்.. விவரிக்க வார்த்தையே இல்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th August 2014 01:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks