-
1st July 2015, 08:14 AM
#1541
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 139
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
வா வா என் தேவதையே !!
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…
-
1st July 2015 08:14 AM
# ADS
Circuit advertisement
-
1st July 2015, 08:16 AM
#1542
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 140

பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
கருவின் கரு - 140
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாமல் அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் இரத்தினக்கால் தோரணை.. தோரணண..
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாலம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே.. புன்னகை மன்னனே..
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ
என் பொம்மு நீ
மம்மு நீ
என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன் __
-
1st July 2015, 08:26 AM
#1543
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 141
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
பாரதியின் வரிகளிலே --- கண்ணன் என் தந்தை !!
பூமிக் கெனை யனுப்பினாள்; -- அந்தப்
புதமண்ட லத்திலென் தம்பிகளுண்டு;
நேமித்த நெறிப்படியே -- இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளிலெல்லாம் -- மனம்
போலவிருந் தாளுபவர் எங்களினத்தார்;
சாமி இவற்றினுக்கெல்லாம் -- எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறிதுரைப்பேன்.
செல்வத்திற்கோர் குறையில்லை; -- எந்தை
சேமித்து வைத்தபொன்னுக் களவொன்றில்லை;
கல்வியில் மிகச்சிறந்தோன் -- அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கிலில்லை;
பல்வகை மாண்பினிடையே -- கொஞ்சம்
பயித்திய மடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி செல்லுபவரை -- மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு.
நாவு துணிகுவதில்லை -- உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே -- எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர்புனைந்தே -- அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே -- அவன்
செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.
பிறந்தது மறக்குலத்தில்; -- அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; -- சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமைகொண்டான்; -- அவன
நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்;
துறந்த நடைகளுடையான்; -- உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.
ஏழைகளைத் தோழமைகொள்வான்; -- செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்;
தாழவருந் துன்பமதிலும் -- நெஞ்சத்
தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தியுடையான்; -- ஒரு
நாளிருந்தபடி மற்றொர் நாளினிலில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; -- பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப்பான்.
இன்பத்தை இனிதெனவும் -- துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை;
அன்பு மிகவுமுடையான்; -- தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே
வன்புகள் பலபுரிவான்; -- ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்ததனையே -- பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டிவிடுவான்.
வேதங்கள் கோத்துவைத்தான்; -- அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை;
வேதங்க ளென்றுபுவியோர் -- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற்றுள்ளே -- அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றியொன்றில்லை -- இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்
நாலு குலங்கள் அமைத்தான்; -- அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்;
சீலம் அறிவுகருமம் -- இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே -- வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியையெல்லாம் -- இன்று
பொசுக்கிவிட் டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்
வயது முதிர்ந்துவிடினும் -- எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை, மூப்புமில்லை, -- என்றும்
சோர்வில்லை, நோயொன்று தொடுவதில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, -- எவர்
பக்கமுநின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
நயமிகத் தெரிந்தவன்காண்; -- தனி
நடுநின்று விதிச்செயல் கண்டுமகிழ்வான்.
துன்பத்தில் நொந்துவருவோர் -- தன்னைத்
தூவென் றிகழ்ந்துசொல்லி வன்புகனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; -- துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;
என்புடை பட்டபொழுதும் -- நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணுபவர்க்கே -- என்றும்
இன்பமிகத் தருவதில் இன்பமுடையான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st July 2015, 09:38 AM
#1544
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
மிகவும் நன்றி சார் - உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவிடலாமே - இந்த பாடல் மனதை கசக்கிப்பிழியும் பாடல்களில் ஒன்று - மொழி வேறுபாடுகள் இல்லாமல் ரசிக்ககூடிய பாடல் இது
Here is a link to a review, in the Hindu, of the (original) classic movie THULABHARAM (1968)...
http://www.thehindu.com/features/met...icle822028.ece
The movie was remade in Tamil, Telugu and Hindi, all of them featuring Sharada in the main role. At least some
of the songs from these versions are available on youtube.
Here is another gem from the movie...
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ
ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது
ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷமென்னவோ
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ...
...and; the Malayalam version:
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st July 2015, 11:58 AM
#1545
Senior Member
Diamond Hubber
ஏன்? (1970)

அடுத்த பாலா தொடருக்கு முன்னால்....
'ஏன்?' என்று வினவாமல் இதைப் படியுங்கள். அப்புறம் ஏன்? என்று இப்பதிவின் அவசியம் புரியும்.
'ஈ.வி.ஆர்' பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.
1970-ல் பொங்கலுக்கு வெளி வந்த இந்தப் படத்துடன் நடிகர் திலகத்தின் 'எங்க மாமா', திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'மாட்டுகார வேலன்' படங்களும் ரிலீஸ்.
குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!)
பார்த்து விடலாம்.
ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, 'மாஸ்டர்' ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு 'ஏன்? என்னாயிற்று?' என்று கேட்பீர்கள். வருகிறேன்.
லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி, லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.
தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மண வீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.
அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து, போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.
பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.
பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.

பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீசிங் டார்ச்சர் கொடுக்கிறார்.
அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.
சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.
ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.
நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.
வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே 'தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம்' என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.
ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் ரவி கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.
ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி 'குடும்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது' என்று கூறி விடுகிறார்.
மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.
வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.
கொலை செய்தது யார்? ஏன்?
காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.

போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.
ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.
'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?
அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது. 
இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.
மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.
ஒரே ஒரு நபரைத் தவிர.
அவர்தான் டி.ஆர்.பாப்பா.
ஏன்? நிறுத்திவிட்டாய்? என்று கேட்கிறீர்கள்.
ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
Last edited by vasudevan31355; 1st July 2015 at 03:05 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st July 2015, 12:21 PM
#1546
Junior Member
Seasoned Hubber
வாசு - ஏற்க்கனவே எடுக்கப்பட்ட உயிர்கள் என்று நினைத்துத்தானே - தேடிப்பிடித்து இந்த படத்தை அலசி உள்ளீர்கள் ??? அது ஏன் சார் எங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ?
-
1st July 2015, 12:36 PM
#1547
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st July 2015, 07:32 PM
#1548
Senior Member
Seasoned Hubber
எங்கெங்கோ சில மணிகள் பாலா வாணி மற்றும் இசையரசியின் குரலில் நமக்கு தெரிந்ததே
இதோ மூவர் குரல்களில் இன்னுமொரு அழகான பாடல்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st July 2015, 07:35 PM
#1549
Senior Member
Diamond Hubber
-
1st July 2015, 07:44 PM
#1550
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks