-
24th October 2015, 10:57 AM
#11
Senior Member
Senior Hubber
//cika tanku tanku .. ippadi oru varnanai enakka enakke enakka// You deserve more than this rajesh.
//சின்னா!
இது யாராக்கும்?//
//வாசு சார்
சின்னாவின் தலையை ரங்கராட்டினம் போல சுற்ற வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே..//
வாசு, ராகவேந்தர்..
கன்ன மிளைத்திருக்க கண்களிலோ மின்னலென
வண்ணப் படமிலையே வாகாக – எண்ணத்தில்
மிஞ்சி மலர்ந்தென்றும் மேனி சிலிர்க்கவைக்கும்
மஞ்சுளா என்றவொரு மான்…
ஹி ஹி..அப்படின்னு வாசு சொல்வார்.. ஆன்ஸர் கரீட்டா..
செந்தில்வேல் … நூறு நூறு முத்தம் கொடுத்தாயே ஹொய்யன்ன ஹொய்யன்னா (ஒய்னு கேக்காம ஹொய்னு கன்னடால்ல கேக்கறாங்களோ) பாட்டுக்கு நன்றி.. ஹச்சோ.. கமலோட இளமைக்குறும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்..கொய்ங்க் கொய்ங்க்னு மேலேற்றப்பார்க்க விஜயசாந்தி அம்மணி நாசூக்காய் விலக்குவது…ம்ம்..அப்புறம் அந்த ஜெயலலிதா என்று இன்னொரு அம்மணி உண்டு படத்துல இல்லியோ..
நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்கு வாட்ச்சு.. இந்த வரி வராம.. நூர்ஜஹான்னு ஒரு பாட்டுல வரி வருமேன்னு மனசுக்குள்ள குடைந்து கொண்டிருந்தேன்..சமர்த்தாய் அதைச் சொல்லிவிட்டீர்கள் செந்தில்வேல் தாங்க்ஸ்..
//சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே// ராகவேந்தர் சார்..யெஸ் கேட்டிருக்கோம்..பட் யூ டோண்ட் பிலிவ் இட்.. இதே பாட்டை ராஜேஷீக்கு த் தரலாம்னு சில நாள் முன்பு எடுத்துப் பார்த்தேன்..பட் கொஞ்சம் சர்ரூக்கு இளமை கம்மியா எனக்குப்பட்டதால விட்டுப்புட்டேன்.. நீங்க கொடுத்துட்டீங்க.. (ராஜேஷ் ஹாப்பி அண்ணாச்சி!)
வாசுவிற்காக..
போட்டாச் பாட் ஒண்ணு..
பார்த்தாலும் பார்த்தேன் நான் உம்மைப்போலப் பார்க்கலை
அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் இன்னும் சாப்பிடலை.. என்ன பண்ணலாம்..கமல் வழியை ஃபாலோ பண்ணலாம்..
பசி எடுக்கற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்.. பட்டாம் பூச்சி..கமல் ஜெய்சித்ரா..எஸ்பிபி வர்றச்சே நீங்க பட்டாம்பூச்சி படத்தப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதுங்க..இப்ப நான் தர்றேன் உங்களுக்கு பரிசாக..வாசு..
வரிகள் புலமைப் பித்தனாம்..இது ரொம்ப நாள் முன்னாலேயே கேட்டு பாடல் வரிகளை க் கேட்டு டைப்பண்ணி வச்சுருந்தேன் (புலமைப் பித்தன் இல்லாமலும் இருக்கலாம்..(இப்போதே சேஃபா சொல்லி வச்சுக்கறது நல்லது)
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேக்கனும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
இள ராஜாத்தி புது ரோஜாப்பூ இதைத் தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
கன்னப்பழம் இது தின்னத்தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும் ரகசியம் காட்டித்தரலாமோ
கண்டவர் கண்படும் முன்னாலே என் கைப்பட ஆறிடும் தன்னாலே
காலநேரம் பார்க்காம மேளச்சத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் பெண்னானது
நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் உந்தன் முன்பே கொஞ்சம் போராடவா
இன்றொரு பாதி நாளை பாதி
பாதியில் நில்லாது வாலிப வேகம்
ஹோப் யூ ஆல் வில் லைக் த ஸாங்..
பின்ன வாரேன்
**
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
24th October 2015 10:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks