மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
..வாழிய கோதையே வாழியுன் பாடலே
*பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...




Reply With Quote
Bookmarks