-
2nd December 2011, 12:27 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
கோலினால் வாயினில் குழலினை ஊதியே
..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
..வாழிய கோதையே வாழியுன் பாடலே
*பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...
சும்மா சொல்லக்கூடாதுங்க ....இது உண்மையிலேயே மிக்க அழகான பாடல். நீங்கள் ஒரு கவி என்பதை எடுத்துக் கூவும் (கூறும் மட்டும் அல்ல) கவிதை. பக்தி ரசம் சொட்டுகிறது.
என் வாழ்த்துக்கள்.
ஐயப்பா பற்றிய கதையும் அருமை என்றே சொல்வேன்.
தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் அடையுமாறு சொல்லும் திறனும் ஓர் இறைக்கொடைதான்.
Please keep up your excellent work.
-
2nd December 2011 12:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks