-
9th April 2013, 11:56 AM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் பிரபு சார்
சரியான முறையில் தங்கள் பார்வையில் ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் புகுந்து அலசியிருக்கிறீர்கள். அவரவர் பார்வையில் என்ற கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.
நிலச்சுவான் தார், பிரபுக்கள் இவர்களை அண்டி வாழும் கோணம் ஒரு புறம் இருக்க ...
கலைமணி அவர்களின் உள்ளத்தில் இருந்தது மற்றொரு விதமான ஏக்கமும் கோபமும் கலந்த ஓர் உணர்வு என்று எனக்குத் தோன்றுகிறது .. of course it's my interpretation may be right or wrong ... depends ...
நாட்டியம் என்பது பிரபுக்களுக்கும் விழாக்களுக்கும் மட்டுமே என்ற ஓர் வரைமுறையை கலைமணி அவர்கள் வெறுத்திருக்கலாம். பல நடனக் கலைஞர்கள் தங்கள் மனதிற்குள் ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் மனம் புழுங்கியிருப்பார்கள், இந்த நிலையை எண்ணி. அதனை வெளிப்படுத்த வேண்டும்.. நடனம் என்பது இறைவனின் வரப்பிரசாதம் என்பதை மக்கள் உணர வேண்டும், அதனுடைய புனிதத் தன்மையைக் கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற மனப்பான்மையில் கூட இந்த கதையை அவர் வடித்திருக்கலாம். ஏனென்றால் அவருக்கு அந்த ஏக்கம் இருந்திருக்கிறது. தம்மால் முடிந்த வரையில் தமக்குத் தெரிந்த வழியில் நடனத்திற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அவர் இந்தக் கதையைப் படைத்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் கோவில்களின் மதிற்சுவர்கள், பிரபுக்களின் நான்கு சுவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி நாட்டியம் பரவ வேண்டும், அது தனக்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடே மோகனாம்பாள் பாத்திரம். கிட்டத் தட்ட இதே அணுகுமுறையும் ஆதங்கமும் அவருக்கு நாதஸ்வரக் கலையின் மீதும் இருந்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் தில்லானா மோகனாம்பாள் கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் படைத்திருப்பார் என நான் நினைக்கிறேன்.
Last edited by RAGHAVENDRA; 9th April 2013 at 11:58 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013 11:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks