-
13th May 2013, 09:42 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
p_r
காங்கிரஸ் ஊழல் சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த பேச்சு அவ1சியம் தானா

அன்னை இந்திரா காந்தி அவர்கள் நல்லாசியுடன் எப்படிப்பட்ட ஒரு காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கக் கூடும் என்பதெல்லாம் தெரியாதது போலவே பேசுவது ஏனோ?
காங்கிரஸும் பிற தேசிய கட்சிகளும் ஆட்சி நடத்தும் அனேக மாநிலங்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது நன்கு தெரிந்தும், 'எல்லாம் நாசமாப் போச்சு' என்று இலம்பாடுவது ஏனோ?
மொத்த க்ரெடிட்டையும் காமராஜ் போட்ட விதை'க்கு மட்டுமே தருவேன் என்று அடம் பிடித்தாலும் (escape route நானே போட்டுத் தரேன் பாருங்க) - நாப்பத்தாறு வருஷம் அதுக்கு தண்ணி ஊத்தி தோட்டம் ஆக்கியிருக்காங்க. அதை acknowledge பண்ணாம பொத்தாம்பொதுவா திட்டக்கூடாது.
அரசியல் தரம் தாழ்வதைப் பத்தி எல்லாம் காங்கிரஸுக்கு பேச யோக்யதையே கிடையாது. சத்யமூர்த்தி பவன்'ல சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு எல்லாம் வருடாந்திர சடங்கு தானே.
காமராஜ் ஒரு exception. அவர் தலைமுறைல, இந்தியால நிறைய இடத்துல சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்ட, அர்ப்பணிப்போட அரசியலுக்கு வந்த idealists ஆட்சில இருந்தாங்க. அதுக்கு அடுத்து அந்த கட்சில வந்தவங்களோட கொள்ளை எல்லாம் பேர் போனது.
இந்த macro-context எல்லாம் விட்டுட்டு, என்னமோ 'கொள்ளை' என்பது திராவிடக் கட்சிகளின் கண்டுபிடிப்பு என்பது போலவும், அவர்கள் இல்லையென்றால் தேனாறும் பாலாறும் ஓடி வழுக்கி விழுந்திருப்போம் என்பது போல பிம்பத்தை எழுப்புவது ஒரு ஏமாற்றுவேலை.
எல்லாருக்கும் விமர்சனம் இருக்கும். அதை எப்படி சொல்றது'ன்னு இருக்கு.
ஒரு 50-60 பக்கம் backlog இருக்கு

எடுத்ததும், இதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கு.
இதற்க்கு பதில் அவசியம் கூறவேண்டுமா? வேண்டுமென்றால் சொல்லுங்கள் பதிலிட நான் தயார் !
அசோகா சக்ரவர்த்தி மரம் நட்டார் என்று கூறினால்....s a அசோகன் கூட கோடம்பாக்கம் முழுவதும் தான் மரம் நட்டார் என்கிற வாதம் வாதமா இல்லை விதண்டாவாதமா ?
என்ன வாதம் செய்கிறோம் எதற்கு இவர்கள் அசோகா சக்ரவர்தியை பற்றி பேசுகிறார்கள் என்று படித்து தெரிந்துகொண்டு இட்டால் நன்று. பதில் சொல்வதற்கு நான் தயார்தான் அதை கேட்பதற்கு தயார என்பதை உரைத்தால் அதற்கேற்றாற்போல் பதில் உரைக்கமுடியும் !
-
13th May 2013 09:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks