-
24th December 2014, 12:22 PM
#2391
தன் கதாநாயகிகளை பற்றி கே பி
இனி, இந்த உடல் எனக்குத் தேவையில்லை என்பவள், ஒரு கட்டத்தில் விலை மாது என்று மாறி நிற்பாள். முன்பு தான் காதலித்த தங்கவேலு (சிவகுமார்) எதிர்பாராதவிதமாக, இவள் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பான். ''இது தப்புனு தெரியும். ஆனா, நீயும் என்னைத்தானே விலை பேச வந்திருக்கே?'' என்று லலிதா கேட்க, கூனிப்போவான் தங்கவேலு
இடையில் தங்கையின் திருமணத்துக்காக வீட்டுக்கு வரும் லலிதா, அவள் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாவாள். கோபம் வந்தவளாய் சுவரில் வரைந்த முக்கோண சின்னத்தை காட்டும் இடத்தில், சமூகத்துக்குப் பாடம் சொல்லும் லலிதா, அந்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான் தனக்கு இந்நிலை என்பதை பரிதாபமாக உணர்த்துவாள். தன் மாராப்பு விலகியதைக்கூட கவனிக்காமல் இருப்பவளிடம், தங்கை அதை சுட்டிக்காட்ட, 'ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு!' என்பாள். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது வாய்க்கு வந்தபடி பேசி விரட்டி அடிப்பார்கள். தங்கவேலு அவளைத் திருமணம் செய்துகொள்ள, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கடைசியாக கடலை நோக்கி ஓடுவாள். சூழ்நிலையாலும் சமூகத்தாலும் அணைந்துபோன மெழுகுவத்தியாக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் குறித்து நம்மை யோசிக்க வைத்தவள் லலிதா. எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th December 2014 12:22 PM
# ADS
Circuit advertisement
-
24th December 2014, 06:59 PM
#2392
Senior Member
Seasoned Hubber

தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்குப் பிறகு புதிய டிரெண்டை உருவாக்கியவர் கே.பி. நடிகர் திலகத்துடனான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். எதிரொலியோடு நடிகர் திலகம் கேபி கூட்டணி நின்று போனது தமிழ் சினிமாவிற்கு துரதிருஷ்டம். எதிரொலி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அது எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பது கணித்திருக்க முடியாததாகும். பல படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் அவருக்குள் நடிகர் திலகத்தை உருவகப் படுத்தி அதனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் நடித்திருந்தாலும் கூட கேபியை பொறுத்தவரை அவர் அந்தப்பாத்திரத்திற்குள் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தியே வடிவமைத்திருந்தார் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன், இன்றும் நம்புகிறேன். அந்த உருவகத்தை ஜெமினி கணேசன் மூலமாக அவர் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்தார் என்றும் நான் எண்ணியதுண்டு. அவருக்குள் நடிகர் திலகத்தை வைத்து இன்னும் படங்களை இயக்கியிருக்கலாமே என்கின்ற ஏக்கம் நிச்சயம் இருந்ததுண்டு என்றும் அதை சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பின் மூலம் அவர் தீர்த்திருக்க வாய்ப்புண்டு என்றும் நான் நம்பி வருகிறேன். இதற்கொரு இன்னொரு உதாரணம், நூற்றுக்கு நூறு. இதில் வரும் பேராசிரியர் கதாபாத்திரத்தைப் பொறுத்த மட்டில் TO SIR WITH LOVE மற்றும் ஆண்டவன் கட்டளை இந்த இரண்டு நாயகர்களின் கலவையாக வடித்திருந்தார் என்பதே என் அபிப்ராயம்.
இன்னும் நூறாண்டுகளுக்கு கேபியின் சகாப்தம் நிலைத்திருக்கும். ஸ்ரீதரும் கேபியும், பீம்சிங்கிற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை வலுவாக தாங்கி நின்ற தூண்கள்.
ஆனால் இந்தத் தூண்கள் சாயவில்லை, சொல்லப்போனால் அந்தத் தூண்களின் வண்ணமாக இவர்கள் கலைந்திருக்கலாம். இவர்கள் வடித்த தூண்களாக மகேந்திரன், பாரதிராஜா, போன்றவர்கள் தாங்கி நிற்பார்கள். அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் அந்தப் பொறுப்பை நிச்சயம் ஏற்பார்கள்.
வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் பாதை உலக உச்சியை நோக்கிச் செல்லும். அப்போது அவர்களை அங்கே வரவேற்க கே.பி., ஸ்ரீதர், பீம்சிங், போன்றோர் காத்திருப்பர்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th December 2014, 09:40 PM
#2393
சிகரத்தை தொட்ட இயக்குனர் சிகரம்
கைலாசம் பாலசந்தர். இதுதான் இவரது முழுப்பெயர். கடந்த 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் பிறந்த இந்த இயக்குனர் சிகரம், சிகரத்தையும் தாண்டி சொர்க்கத்தை அடைந்த நாள் இன்று. ஆம் இந்த சிகரம் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டது.

சிறுவயதிலேயே மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, சர்வர் சுந்தரம், நவக்கிரகம் போன்ற நாடகங்களை இயக்கி அவற்றை சென்னையில் நடத்தி வந்தார். பின்னர் முதன்முதலாக எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் என்ற படத்திற்காக பாலசந்தர் வசனம் எழுதினார். இவருடைய திறமையை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இவருடைய நாடகங்களுள் ஒன்றான சர்வர் சுந்தரம்' நாடகத்தின் கதை உரிமையை பெற்று திரைப்படமாக்கினார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்.

தமிழ்த் திரையுலகிற்கு வசனகர்த்தாவாகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருந்த பாலசந்தர் முதன்முதலில் இயக்குனர் ஆனது நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம்தான். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனது நாடகங்களான மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற படங்களை இயக்கினார்.

பாலசந்தரின் பெண்ணிய புரட்சி கருத்துக்கள் வெளிவர காரணமாக இருந்த படம் அரங்கேற்றம். பிராமின் குடும்பத்தில் ஆச்சாரமாக சூழ்நிலையில் பிறந்த ஒரு பெண், குடும்பத்தினர்களின் நலனுக்காக விபச்சாரத்திற்கு தள்ளப்படும் புரட்சி திரைக்கதை கொண்ட படமாக இது அமைந்தது. அதன் பின்னர் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கின்றேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகியவை முக்கிய படங்களாகும். இதில் இன்று சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகின்ற ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் பெண்மைப்புரட்சி மற்றொரு செய்த படம் என்று அவள் ஒரு தொடர்கதை படத்தை கூறலாம். இந்த படத்தில் அறிமுகமான சுஜாதா பின்னாளில் பெரிய நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுஜாதா வேடத்தில் ஜெயப்ரதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது
பின்னர் விதவைபெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் "அவர்கள்", வேலையில்லா பட்டதாரிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய 'வறுமையின் நிறம் சிகப்பு, ஆகியவை 1980களில் வந்த குறிப்பிடத்தக்க படங்களாகும்

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்தில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பாலசந்தர், சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் எதிரொலி. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு நல்லவன் எப்படி படிப்படியாக கெட்டவனாக மாறி கொலை செய்ய துணியும் அளவுக்கு போகிறான் என்பதே இந்த படத்தின் கதை.
அதன்பின்னர் பாலசந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, போன்ற பல படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒரு புரட்சி கருத்து இருக்க தவறுவதில்லை.
பெரிய திரையை போலவே சின்னத்திரையிலும் தனது தனி முத்திரையை பதித்தவர் பாலசந்தர். முதன்முதலாக சின்னத்திரையில் கையளவு மனசு என்ற தொடரை இயக்கினார். அதன் பின்னர் ரயில் சினேகம், ரமணி vs ரமணி, காதல் பகடை, ஒரு கூடை பாசம், பிரேமி, ஜனனி, அண்ணி போன்ற தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.
பாலசந்தர் இயக்கிய 100வது படம் பார்த்தாலே பரவசம் மற்றும் அவர் இயக்கிய கடைசி படம் பொய். இது அவரது 101வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசில படங்களில் அவர் நடிகராகவும் ஜொலித்துள்ளார். பாரதிராஜாவுடன் இவர் நடித்த ஒரே படம் ரெட்டைச்சுழி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளிவரவுள்ள கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பாலசந்தர். அதுவே அவர் நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை,புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற பாலசந்தர், 1994ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் அண்ணமலை, அழகப்பா, மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளன.
உலக சினிமா வரலாறு என்ற புத்தகம் எழுதப்பட்டால் அதில் பாலசந்தரின் பெயர் ஒரு பக்கம் அளவுக்காவது இருக்கும். அந்த அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த படங்களை இயக்கிய பாலசந்தரை பற்றி சொல்ல இந்த ஒரு பக்கம் போதாது. எனினும் அவரை பற்றி அவர் மறைந்த இந்நாளில் ஒருசில துளிகளை எடுத்து கூறியதில் பெருமைப்படுகிறோம். பாலசந்தரின் பூத உடல் வேண்டுமானால் மறையலாம். ஆனால் அவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் என்றுமே அழியாது. அழியாப்புகழ் பெற்ற பாலசந்தரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Thanks:http://www.indiaglitz.com
Last edited by sss; 24th December 2014 at 10:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th December 2014, 05:38 AM
#2394
Junior Member
Newbie Hubber
எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.
பாலசந்தர் என்ன செய்தார்?
தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.
அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.
ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.
தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.
மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
புத்திணைப்பில் தந்தார்.
சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.
அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.
உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.
புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.
யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .
இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.
தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.
எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.
சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th December 2014, 02:43 PM
#2395
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th December 2014, 02:47 PM
#2396
Senior Member
Senior Hubber
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..
எவ்வளவோ பாடல்கள் இருக்கலாம் கிருஸ்துமஸ் நன்னாளுக்கு. எனக்கு எப்போதும் மனதில் வருவது கிண்கிணிக் கிண்கிணி கிணி என வரும் மாதா கோவில் மணியோசை.. தவப்புதல்வன் பற்றி நிறையப் பேசியிருப்பார்கள்.. இந்தப் பாடலில் மாலைக் கண் நோயுடன் (அம்மாவிற்குத் தெரியக் கூடாது என்பதும் ஒன்று) ந.தி ஆடும் காட்சி மனதில் பதிந்திருக்கும் ஒன்று..
ஆடை அழகி மேரி உனக்கு முத்து மாலைப் பரிசு
மேடைப்பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு
பாட்டுப் பாடும் பாபு உனக்கு பட்டுச் சொக்காய்ப் பரிசு
ஆட்டமாடும் ராணி உனக்கு தங்கப் பேனா பரிசு
சீருடை தாங்கிய ஷீலாப் பொண்ணுக்கு சிக்லட் பாக்கெட் பரிசு
நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்குவாட்ச்சு..( நினைவிலிருந்து எழுதுகிறேன்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th December 2014, 09:55 PM
#2397
Junior Member
Seasoned Hubber
இறப்பவர்களில் இரண்டு வகை :
1. வாழும்போதே இறப்பவர்கள் - இவர்களால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை - பூமிக்கு பாரமாக இருப்பவர்கள் - கடைசி வரை மற்றவர்களை வார்த்தைகளாலும் , செய்கையினாலும் துன்புறுத்தியே இன்பம் காணுபவர்கள் - இவர்கள் வாழும்போது - வாழ்க்கையின் அர்த்தத்தை உணராதவர்கள் - தனக்குத்தான் எல்லாம் வரும் , தெரியும் என்று நினைத்து ஒரு மாயையில் நாட்களை கடத்துபவர்கள் . இவர்கள் வாழும்போதே இறந்து விடுகின்றவர்கள் !!
2. இறந்தும் வாழ்பவர்கள் - இவர்களை உலகம் மறப்பதில்லை - பலயுகங்கள் கடந்தாலும் இவர்கள் வாழ்வார்கள் - மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி தந்தவர்கள் - முன்னோடியாக இருப்பவர்கள் - இந்த வரிசையில் இரு திலகங்களுக்கு பிறகு KB இடம் பெறுகின்றார் - இவரை மறப்பது அவ்வளவு சுலபம் இல்லை ----
ஒவ்வொரு வருடமும் சில நல்ல உள்ளங்களை நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு சென்று விடுகின்றது - இந்த வருடம் நன்றாக வாழ்க்கையை அனுபவித்தவர்களை மட்டும் அல்ல , அரும்ப துடிக்கும் மொட்டுக்களையும் , தீவிரவாதம் என்ற போர்வையில் இரக்கமே இல்லாமல் சுட்டு தள்ளி விட்டது . அதன் கோர பசிக்கு பச்சிளம் குழந்தைகள் தானா கிடைத்தார்கள் ? வரும் வருடம் பசி இல்லாமல் வர வேண்டும் என்று ப்ராத்தனை செய்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ??
Beautiful narration about LIFE - Still trying to understand !!
The Egg
By: Andy Weir
You were on your way home when you died.
It was a car accident. Nothing particularly remarkable, but fatal nonetheless. You left behind a wife and two children. It was a painless death. The EMTs tried their best to save you, but to no avail. Your body was so utterly shattered you were better off, trust me.
And thats when you met me.
What what happened? You asked. Where am I?
You died, I said, matter-of-factly. No point in mincing words.
There was a a truck and it was skidding
Yup, I said.
I I died?
Yup. But dont feel bad about it. Everyone dies, I said.
You looked around. There was nothingness. Just you and me. What is this place? You asked. Is this the afterlife?
More or less, I said.
Are you god? You asked.
Yup, I replied. Im God.
My kids my wife, you said.
What about them?
Will they be all right?
Thats what I like to see, I said. You just died and your main concern is for your family. Thats good stuff right there.
You looked at me with fascination. To you, I didn't look like God. I just looked like some man. Or possibly a woman. Some vague authority figure, maybe. More of a grammar school teacher than the almighty.
Dont worry, I said. Theyll be fine. Your kids will remember you as perfect in every way. They didn't have time to grow contempt for you. Your wife will cry on the outside, but will be secretly relieved. To be fair, your marriage was falling apart. If its any consolation, shell feel very guilty for feeling relieved.
Oh, you said. So what happens now? Do I go to heaven or hell or something?
Neither, I said. Youll be reincarnated.
Ah, you said. So the Hindus were right,
All religions are right in their own way, I said. Walk with me.
You followed along as we strode through the void. Where are we going?
Nowhere in particular, I said. Its just nice to walk while we talk.
So whats the point, then? You asked. When I get reborn, Ill just be a blank slate, right? A baby. So all my experiences and everything I did in this life wont matter.
Not so! I said. You have within you all the knowledge and experiences of all your past lives. You just dont remember them right now.
I stopped walking and took you by the shoulders. Your soul is more magnificent, beautiful, and gigantic than you can possibly imagine. A human mind can only contain a tiny fraction of what you are. Its like sticking your finger in a glass of water to see if its hot or cold. You put a tiny part of yourself into the vessel, and when you bring it back out, you've gained all the experiences it had.
You've been in a human for the last 48 years, so you havent stretched out yet and felt the rest of your immense consciousness. If we hung out here for long enough, youd start remembering everything. But theres no point to doing that between each life.
How many times have I been reincarnated, then?
Oh lots. Lots and lots. An in to lots of different lives. I said. This time around, youll be a Chinese peasant girl in 540 AD.
Wait, what? You stammered. Youre sending me back in time?
Well, I guess technically. Time, as you know it, only exists in your universe.
Things are different where I come from.
Where you come from? You said.
Oh sure, I explained I come from somewhere. Somewhere else. And there are others like me. I know youll want to know what its like there, but honestly you wouldn't understand.
Oh, you said, a little let down. But wait. If I get reincarnated to other places in time, I could have interacted with myself at some point.
Sure. Happens all the time. And with both lives only aware of their own lifespan you dont even know its happening.
So whats the point of it all?
Seriously? I asked. Seriously? Youre asking me for the meaning of life? Isnt that a little stereotypical?
Well its a reasonable question, you persisted.
I looked you in the eye. The meaning of life, the reason I made this whole universe, is for you to mature.
You mean mankind? You want us to mature?
No, just you. I made this whole universe for you. With each new life you grow and mature and become a larger and greater intellect.
Just me? What about everyone else?
There is no one else, I said. In this universe, theres just you and me.
You stared blankly at me. But all the people on earth
All you. Different incarnations of you.
Wait. Im everyone!?
Now youre getting it, I said, with a congratulatory slap on the back.
Im every human being who ever lived?
Or who will ever live, yes.
Im Abraham Lincoln?
And youre John Wilkes Booth, too, I added.
Im Hitler? You said, appalled.
And youre the millions he killed.
Im Jesus?
And youre everyone who followed him.
You fell silent.
Every time you victimized someone, I said, you were victimizing yourself. Every act of kindness you've done, you've done to yourself. Every happy and sad moment ever experienced by any human was, or will be, experienced by you.
You thought for a long time.
Why? You asked me. Why do all this?
Because someday, you will become like me. Because thats what you are. Youre one of my kind. Youre my child.
Whoa, you said, incredulous. You mean Im a god?
No. Not yet. Youre a fetus. Youre still growing. Once you've lived every human life throughout all time, you will have grown enough to be born.
So the whole universe, you said, its just
An egg. I answered. Now its time for you to move on to your next life.
And I sent you on your way.
The End.
இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில் வாழும் போதே இறக்காமல் , எல்லோரும் வாழும் வகையில் உதவியாக இருப்போம் !
இந்த பாடல்கள் உங்களுக்கு
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
25th December 2014, 10:57 PM
#2398
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
Beautiful narration about LIFE - Still trying to understand !!
It is beautifully narrated, and it sure would a take several rounds of reading to understand it fully (if at all!)! 
Thank you!
-
26th December 2014, 11:08 AM
#2399
Junior Member
Seasoned Hubber
Superb melody from Panner Pushpangal
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th December 2014, 12:22 PM
#2400
நேற்று ஜாலியாக ஜல்லி அடித்த ஒரு விவாதம் எங்கள் நண்பர்களிடத்தில்
பாலு வாலி குமார் , (1965 முதல் 1970 வரை )
பாலு கண்ணதாசன் விஸ்வநாதன் (1971 முதல் 1981 வரை)
பாலு வைரமுத்து இளையராஜா (1984 முதல் 1990 வரை)
பாலு வைரமுத்து ரஹ்மான் (டூயட் மற்றும் பார்த்தாலே பரவசம் )
பாலு புலமைபித்தன் மரகதமணி (அழகன் )
மிக நீண்ட நேரம் நடந்தது . எல்லோரும் அவரவர் கருத்தை அகந்தை இன்றி தெரிவித்தார்கள். விவாதத்திற்கு முடிவு ஏது ? .ஆனால் நல்ல பல பாடல்கள் அவரவர் பாணியில் சிலாகிகபட்டன
Bookmarks